Language हिन्दी / ਪੰਜਾਬੀ / ગુજરાતી / മലയാളം / मराठी / English

நாங்கள் ஏன் அக்கறை காட்டுகிறோம்

அவர் முதலில் நம்மை நேசித்ததால் நாங்கள் நேசிக்கிறோம் - 1 யோவான் 4:19

நாங்கள் அக்கறை காட்டுவதற்குக் காரணம் நாம் அனைவரும் அவரவர் போராட்டத்தின் பங்கைக் கொண்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த (ஆன்லைன் மற்றும் நேரில் சந்திக்கும்) மக்கள் என்பதாலேயே. விசயங்களை இரகசியமாக வைப்பதனால் அவை நம் மீது ஒரு சக்தியைக் கொண்டிருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே, ஆனால் வாழ்க்கை பயணத்தில் மற்றவரின் ஆதரவைப் பெறுவது என்பது நமக்கு ஒரு சக்தியையும் ஞானத்தையும் வழங்குகிறது.

இயேசு கிறிஸ்துவின் சக்தி மற்றும் அன்பின் மூலம் அமைதி மற்றும் மகிழ்ச்சியுடனும் எங்கள் போராட்டங்களுக்கு நடுவில் நம்பமுடியாத நம்பிக்கையையும் நாங்கள் கண்டோம். இந்த நற்செய்தியை நாமே வைத்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. இந்த நம்பிக்கை, அமைதி, வலிமை மற்றும் மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்கப் போராடும் மற்றவர்களுக்கு உதவ நாங்கள் ஆர்வமாக உள்ளோம், இதனால் தேவன் அவர்களுக்காகத் திட்டமிட்டுள்ள அற்புதமான வாழ்க்கையில் அவர்கள் பயணிக்க முடியும்.

தயவுசெய்து எங்களால் எப்படி உதவ முடியும் என எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

தேவன் நம் அனைவரையும் நிபந்தனையின்றி நேசிக்கிறார் மற்றும் நம்முடைய போராட்டங்களைச் சமாளிக்க உதவ விரும்புகிறார். அவருடைய உதவியை அனுபவிக்க நாம் முதலில் அவருடன் தனிப்பட்ட உறவில் இணைய வேண்டும். அந்த உறவுமுறையைக் கண்டறிவது எப்படி என்பது இதோ இங்கே.

பெரும்பாலான மக்கள் இந்த உலகத்தையும் தங்கள் வாழ்க்கையையும் மேம்படுத்த வேண்டும் என்ற வலுவான ஆசை கொண்டவர்களாக இருக்கிறார். அது ஏன்? ஏனென்றால், உலகம் இருக்க வேண்டிய நிலையில் இல்லை என்பதை அவர்கள் தங்கள் ஆழ் மனதில் அறிவார்கள். அது மேலும் பல வழிகளில் உடைந்துள்ளது, நாமும் அப்படித்தான் இருக்கிறோம். படைப்பின் தொடக்கத்திலிருந்து தேவன் எழுதி வரும் மீட்பின் மற்றும் குணப்படுத்தும் கதையின் ஒரு பகுதியாக நாம் அனைவரும் இருக்கிறோம்.

வாழ்வதற்காக உருவாக்கப்பட்டவர்கள்

தேவன் நமக்கும் அவருக்கும் இடையில் எதுவும் வராமல் தனிப்பட்ட முறையில் அவரை அறிந்து கொள்ளவும், நாம் முழுமையாக நம் வாழ்க்கையை வாழ்வதற்காகவும் படைத்தார். ஒருபோதும் மற்றவர்களைக் காயப்படுத்தவோ, நாம் காயப்படுத்தப்பட்டோ இருக்கக் கூடாது. அவர் நமக்காக உருவாக்கிய பரிபூரண உலகத்தை அனுபவிக்கவும், ஒவ்வொரு நாளும் நம் ஜீவனோடு மகிழ்ச்சி, வாழ்க்கையின் நோக்கம் மற்றும் அர்த்தமும் இருக்க வேண்டும். “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” (ஆதியாகமம் 2:7).

வாழ்க்கையை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டோம்

ஆனால் நாம் திருப்திகரமாக இல்லை. முதல் மனிதர்கள் தேவன் மற்றும் அவர் அளித்த அற்புதமான வாழ்க்கையை புறக்கணித்தனர். அப்படிதான் மரணம், வலி மற்றும் தீமை மற்றும் தனிமை ஆகியவை உலகிற்கு வந்தன. ஒரு எதிரான தேர்வு மூலம், தேவனுடனான உறவு துண்டிக்கப்பட்டது. "நியாயமில்லை" என்று நாம் கூறலாம். ஆனால் நாம் அனைவரும் பாவிகள். ஆழ் மனதில் நமக்கும் தெரியும், நாமும் அதையே தான் செய்கிறோம் என: நாம் நம்மை முதலிடத்தில் வைக்க விரும்புகிறோம், தேவன் வகுக்கும் வழியை விட நாம் நமது சொந்த வழியைத் தேர்வு செய்கிறோம். “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” (ரோமர் 6:23).

வாழ்வதற்காக மீட்டெடுக்கப்பட்டது

இயேசுவால் மட்டும் தான் நம்மை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். சிலுவையில், தேவனுடைய குமாரன் நமக்காக மரணத்தை ஏற்றுக் கொண்டார். நமது எல்லா தவறுகளுக்கும் அவர் முழு விலை கொடுத்து தீமையைத் தோற்கடித்தார். பின்னர் அவர் மீண்டும் உயிரோடு வந்ததன் மூலம் அதை நிரூபித்தார். இப்போது அவர்மீது மற்றும் அவர் நமக்காகச் செய்ததன் மீது நம்பிக்கை வைக்க விரும்பும் எவருக்கும், உண்மையான மற்றும் முழுமையான வாழ்க்கையை அவர் வழங்குகிறார். இது ஒரு இலவச பரிசு, ஆனால் அது நமது அகங்காரத்தைப் பாதிக்கிறது. நம்மை நாம் காப்பாற்ற முயற்சிப்பதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக எல்லாவற்றையும் அவரிடம் கொடுக்க இயேசுவை நம்பினால் நாம் காப்பாற்றப்படுவோம்.

“திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.” (யோவான் 10:10b). “நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக்கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.” (2 தீமோத்தேயு 1:10).

வாழ்க்கைக்கான தேர்வு

நீங்கள் தேர்வு செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இந்த கட்டத்திலிருந்து உங்கள் வாழ்க்கை இரண்டு திசைகளில் ஒன்றில் செல்லலாம்: இயேசு உங்களுக்காக அளிக்கும் அற்புதமான வாழ்க்கையிலிருந்து பிரிக்கப்பட்டு உங்கள் வாழ்க்கையின் பொறுப்பை நீங்களே ஏற்பது.

அல்லது

உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்குக் கொடுங்கள் மற்றும் தேவனோடு ஒரு உறவைக் உருவாக்குங்கள், அது உங்களை உள்ளே இருந்து மாற்றத் தொடங்கும். நீங்கள் வாழ்க்கையின் நோக்கம் மற்றும் பொருளை அறிவீர்கள், மன்னிக்கப்பட்டதன் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் கடந்த காலத்திலிருந்து குணமடையத் தொடங்குவீர்கள், உண்மையில் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் முழுமையாக உயிர் பெற்று இருப்பீர்கள்.

அந்த வாழ்க்கையை எப்படித் தேர்வு செய்வது

“கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.” (ரோமர் 10:9).

உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்குக் கொடுக்க உதவும் ஒரு பரிந்துரைக்கப்பட்ட பிரார்த்தனை இதோ உங்களுக்காக இங்கே:

“தேவனே, நான் நீண்ட காலமாக என் போக்கில் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன், நான் மிகவும் சிரமப்பட்டதால் சோர்வாக இருக்கிறேன். என் சுயநலத்திலிருந்து என்னை விடுவிப்பதற்காக இயேசு இறந்தார் என்று நான் நம்புகிறேன். தயவுசெய்து என் பாவங்களை மன்னியுங்கள். இயேசு மரணத்திலிருந்து மீண்டு வந்ததற்கு நன்றி. நீங்கள் அவரை உயிர்ப்பித்தீர்கள். உங்களுடன் புதிய வாழ்க்கை எனும் இலவச பரிசை நான் ஏற்றுக்கொள்கிறேன். என் வாழ்க்கை இப்போது உங்களுடையது. உங்கள் உதவியுடன் உங்கள் வழியில் வாழ எனக்கு உதவுங்கள். ஆமென்.”

நீங்கள் இயேசுவைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்திருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். கீழேயுள்ள படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்தால், உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் உங்களுடன் ஜெபிக்கவும் ஒரு வழிகாட்டி விரைவில் உங்களுடன் இணைவார்.

எனக்கு இன்னும் கேள்விகள் உள்ளன