மிதிக்கப்பட்ட எனது இதயம்

எனது கண்வரை நான் சந்தித்தபோது எனக்கு 15 வயதே ஆகியிருந்தது. அவர் வயது 16. அந்த இளம் வயதிலும், நான் ஒரு வலிமையான சுதந்திரமான பெண்ணாக இருந்தேன். வாழ்க்கையில் எனக்கு என்ன தேவை என்பதை நான் அறிந்திருந்தேன். அதைப் பெறுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தேன். அதில் ஒன்று தான் அவரை நான் விரும்பியது. ஆனால் வலி மிகுந்த, பயங்கரமான அதிவேகமான ஏற்ற இறக்கம் கொண்ட வாழ்க்கை பயணம் முன்னே இருப்பதை நான் கொஞ்சம் கூட அறியாதவளாக இருந்தேன்.

எங்கள் திருமணம் முடிந்த சில வருடங்களில், எனது கணவர் வெளிப்படையாக பாலியல் தொடர்பான மின்னஞ்சல்களை இணையத்தில் அவர் சந்தித்த பெண்களுக்கு அனுப்புகிறார் என்பதை கண்டுபிடித்தேன். நான் நிலைகுலைந்து போனேன் அது பற்றி அவரிடம் கேட்டேன், அவர் அதற்காக மன்னிப்புக் கேட்டதால் அவர் மீண்டும் அது போன்று செய்யமாட்டார் என்று நான் நம்பிய காரணத்தாலும் நான் மேற்கொண்டு அதுபற்றி கவலைப்படவில்லை. பிறகு சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து, என் கண்ணுக்கு அருகிலேயே ஒரு தொடர்பை அவர் வைத்திருப்பதை நான் கண்டுபிடித்தேன். ஒரு பெண்ணை நகரத்திற்கு விமானம் மூலம் அழைத்து வந்து, ஒரு விடுதி அறையில் தங்க வைத்து வார இறுதி நாட்கள் முழுவதும் அவளுடன் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த முறை நான் நிலைகுலைந்து போனது மட்டுமல்லாமல் கோபமும் அடைந்தேன். ஆகவே அவரை வீட்டிலிருந்து விரட்டி விட்டேன். ஒரு வாரத்திற்குப் பிறகு என்னை அழைத்து அவர் அழுதார் மற்றும் உடைந்து போனார். நாம் பேசலாம் என்று அவரிடம் சொன்னேன். மற்றும் எங்களது மண வாழ்க்கையில் முதல் முறையாக இருவரும் சேர்ந்து பிரார்த்தித்தோம். ஒரு ஆலோசகரை பார்க்கத் தொடங்கினோம். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்தும் நல்ல நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.

இருப்பினும், எனக்குத் தெரியாமல் அவர் மிகவும் இரகசியமாக, நான் கண்டுபிடிக்க மாட்டேன் என்ற நம்பிக்கையிலும் மற்றும் இந்த தொடர்புகள் காரணமாக அவருடன் எவரும் உணர்வு பூர்வமான உறவை வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதாலும்— காசு கொடுத்து விபச்சாரிகளுடன் உடலுறவு கொள்ளத் தொடங்கினார். ஒன்பது வயதில் தொடங்கிய எனது கணவரின் பாலியல் வக்கிரமும் அடிமையாதலும் அவரை இது வரை கொண்டுவந்து விட்டுவிட்டது.

புதிர் முழுவதும் அவிழ்த்து நான் தெரிந்து கொண்டேன். தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு கட்டுப்படுத்த முடியாமல் நடுங்கினேன்.

இதை நான் கண்டுபிடித்தபோது, இதை அறியாதிருந்ததற்காக ஒரு முட்டாள் போன்று நான் உணர்ந்தேன், ஆனால் எங்களது திருமண பந்தத்தை இறுதியாக ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் எனது தீர்மானத்தை நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்தேன். நான் விவாகரத்து கோரப் போகிறேன் என்று ஒரு கடிதத்தை எழுதி அத்துடன் எனது திருமண மோதிரத்தையும் இணைத்து, வசிக்கும் அறையில் மேஜை மீது வைத்தேன். நானும் எனது கணவரும் ஒரு மாதத்திற்கு முன்புதான் குடியேறிய இடத்திலிருந்து நாட்டின் மற்றொரு மூலைக்கு திரும்பிச்செல்ல எனது பொருட்கள் அனைத்தையும் பொட்டலம் கட்ட எனது தாயார் எனக்கு உதவினார். புதிர் முழுவதும் அவிழ்த்து நான் தெரிந்து கொண்டேன். தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு கட்டுப்படுத்த முடியாமல் நடுங்கினேன். இந்த அதிவேக பயங்கரமான ஏற்ற இறக்கம் கொண்ட திருமண வாழ்க்கை எனது உடலை பாதித்து வலுவிழக்கச் செய்தது மற்றும் ஆலோசிக்கவோ அல்லது உணரவோ இயலாமல் செய்தது.

அவரை விட்டு சுமார் 3,000 மைல்களுக்கு அப்பால் சென்ற பிறகு, பதில்களைத் தேட ஆரம்பித்தேன். பிரச்சினை என்னவென்றால், எனக்கு எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை. எனது கணவர் எனக்கு கொடுத்த வலி மற்றும் மனவேதனை இவற்றுக்கெல்லாம் அப்பால் அவரை இன்னும் நான் நேசிக்கிறேன். இருப்பினும் அவருடன் நான் எப்போதும் சேர்ந்து வாழ முடியாது என்று அவரது நடவடிக்கைகள் எனக்குப் புரியவைத்தன.

நான் அனைத்திலும் சரியானவள் என்று இல்லை—சிறிது கஷ்டம் வந்தபோது வெளிப்படக்கூடிய, எனது சொந்தப் பிரச்சினைகள் பல என்னிடம் உள்ளது, இதற்கு முன் சரிபார்ப்பதற்கு பிறரின் ஏற்பு மற்றும் கவனம் ஆகியவற்றின் மூலம் தேடினேன். ஆகவே தொடக்கத்தில், அவரது திருமண பந்தத்துக்கு வெளியேயான துரோக நடவடிக்கைகளை மிகவும் தனிப்பட்டதாக எடுத்துக்கொண்டேன். அவர் விருப்பத்தை குறையாவிடாது வைத்திருக்கும் அளவுக்கு வெளிப்படையாக ஒரு நல்ல மனைவியாக நான் இல்லை. இது வேறு ஒருவருடன் மீண்டும் தொடராது என்பது எனக்கு எப்படித் தெரியும்?

சிலவற்றுக்கு அடிமையானதன் காரணமாக, அவர் தேர்ந்தெடுத்த அழிவுக்கான நடவடிக்கைகள் அவரை மேலும் ஆழமாக ஒரு இருண்ட குழிக்குள் இழுத்துச் சென்றது.

இருப்பினும் விவாகரத்து இறுதியாக முடிவு செய்யப்படுவதற்கு முன் நாங்கள் மீண்டும் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் பேசிக்கொள்ளத் தொடங்கினோம். மிகவும் வெளிப்படையாக எங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டோம். எங்கள் மண வாழ்க்கையில் எது மிக மோசமான நிலைக்கு இட்டுச்செல்லக் காரணமாக இருந்தது என்பதை கண்டறிய முயற்சித்தோம். உண்மை என்னவென்றால், எனது கணவரின் பாலியல் அடிமைத்தனத்திற்கான சரிவு நான் வருவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. அதற்கு அடிமையானதன் காரணமாக, அவர் தேர்ந்தெடுத்த அழிவுக்கான நடவடிக்கைகள் அவரை மேலும் ஆழமாக ஒரு இருண்ட குழிக்குள் இழுத்துச் சென்றது. அவர் மாறத்தான் விரும்பினார். ஆனால் அது எப்படி என்று அவருக்குத் தெரியவில்லை. நான் இன்னும் மோசமாக காயப்படுத்தி விட்டேன். மேலே இதைக் கடந்து செல்வது மற்றும் எதிர்கால உறவுகளில் இதே தவறுகளை மீண்டும் செய்யாதிருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே நம்பிக்கை. ஆனால் மிகவும் பாதிக்கப்பட்டு பகிர்ந்து கொண்டதன் மூலம், நாங்கள் நெருக்கமாகி, எங்கள் ஆழ்ந்த வலிகள் மற்றும் சிக்கல்களுக்குத் நேரடியாகத் தீர்வு கண்டோம்.

ஆறு மாத பிரிவுக்கு பின்னர் எனது கணவர் சமரசமானார். என்னைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். எங்களது பிரச்சினைகள் ஒரே இரவில் தீர்ந்து விடவில்லை. எங்களது திருமண வாழ்வை அழகான ஓன்றாக வளர்த்தெடுக்க ஒரு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆனது. எந்த வழியிலும் அது இலகுவான பயணமாக அமையவில்லை. ஆனால் இப்போது எங்களது பயங்கரமான ஏற்ற இறக்கமான உறவு விழக்கூடிய எந்த ஒரு பெரிய பள்ளமோ ஏறவேண்டிய பெரிய ஏற்றமோ இல்லாது ஒரு சமதளத்தில் சீராக சென்று கொண்டிருக்கிறது.

இந்த அனுபவம் என்னை இறுதியில் இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது. எனது கணவரை “சரி” செய்வதற்கு தேவையானவள் நான் அல்ல என்று என்னை இது உணர வைத்திருக்கிறது. ஆனால், எனது சொந்த பிரச்சினைகள் மற்றும் அணுகுமுறைகள் ஆகியவற்றை சரிசெய்து அவருக்கு நான் உதவக்கூடும். நான் மட்டுமே தனிப்பட்ட முறையில் பிரச்சினையாக இல்லாத போதும் (அவரது தேர்வுகளுக்கு அவர் மட்டுமே பொறுப்பு) அதற்கான தீர்வுகளில் நான் ஒரு பகுதியாக விளங்கலாம்.

துணையின் துரோகங்களை கையாளுவது மிகவும் கடினமான வயிற்றைப் பிசைகிற பயணமாக இருக்கும். இதில் நீங்கள் மட்டுமே பயணப்படத் தேவையில்லை. இதில் மேலும் கீழும் பயணம் செய்த புரிந்து கொள்ளக்கூடிய நபர்கள் என்னை போன்ற சிலர் இருக்கிறார்கள், உங்கள் துணை தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறாரோ இல்லையோ, இந்தக் காயங்கள் மற்றும் நிராகரிப்புகளை சரியாகக் கையாள உங்களுக்கு நாங்கள் உதவ முடியும். கீழே படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்தால், எங்களில் ஒரு ஆதரவாளர் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார். உங்கள் உரையாடல்கள் இரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் மற்றும் இந்த சேவைக்கு எப்போதும், எந்த விதமான கட்டணமும் கிடையாது.

புகைப்பட கிரெடிட் Sweet Ice Cream Photography

நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.

இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!

நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.

உங்கள் பாலினம்:
வயது வரம்பு:

உங்களுக்கு பொருத்தமான வழிகாட்டியை வழங்க உங்கள் பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை நாங்கள் கேட்கிறோம் சேவை விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை.